Showing posts with label அணுஉலை. Show all posts
Showing posts with label அணுஉலை. Show all posts

November 07, 2012

சென்னையில் அணு உலைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம்

03/11/2012 சனிக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் அணு உலைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.

எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், அன்புசெல்வம், கோணங்கி, திலீப்குமார், யூமா வாசுகி, ஸ்டாலின் ராஜாங்கம், யுவபாரதி, கடற்கரை, அஜயன்பாலா, கவின்மலர், அ.ஜெகநாதன், தமிழச்சி தங்கபாண்டியன், தி.பரமேசுவரி, கு.உமாதேவி, ஜெயபூர்ணிமா, அருள் எழிலன், நிர்மலா கொற்றவை, வசுமித்ர, விஷ்ணுபுரம் சரவணன், காரை மைந்தன், பொன்.ஏழுமலை, செந்தூரன், இளவேனில், பதிப்பாளர் யாக்கன், ஓவியர்கள் வீரசந்தானம் மற்றும் அரஸ், பேரா. பிரபா கல்விமணி, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ்.மணி, கார்ட்டூனிஸ்ட் பாலா, ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், பூவுலகின் நண்பர்கள் பி.சுந்தரராஜன், மா.பெ.பொ.க. வாலாசா வல்லவன், மே 17 இயக்கம் த.சுந்தரமூர்த்தி, சேவ் தமிழ் கி.அருணகிரி, புரட்சிக்கவிஞர் கலை இலக்கிய மன்றம் தமிழேந்தி, தமிழ்நாடு மாணவர் இயக்கம் சே.இளையராஜா, தலித் விடுதலை இயக்கம் கருப்பையா, தமிழ்நாடு மக்கள் கட்சி ப.அருண் சோரி, கல்கத்தா இயற்பியல் பேரா.குருபிரசாத் கான், தமிழகத் தமிழாசிரியர் கழகம் ஜே.கங்காதரன், சமூக ஆர்வலர்கள் நா.சாத்தப்பன், மி.டேவிட், வி.பால்கிரேகேரி, ஜே.சாம்ராஜ், வெங்கடேசன், பூ.ஆகாசமுத்து, காயல்பட்டினம் ஷமீம் இஸ்லாம், இடிந்தகரை கவாஸ்கர், கூத்தன்குழி அசோக் உட்பட பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.