Showing posts with label ஏந்தல் கணா. Show all posts
Showing posts with label ஏந்தல் கணா. Show all posts

September 07, 2010

கூர் தீட்டிய விழிகள் - கவிதை நூல் வெளியீட்டு விழா

கூர் தீட்டிய விழிகள் கவிதை நூல் வெளியீடு 04.09.10 மாலை 5 திருவண்ணாமலை அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அ.அப்போலியன் வரவேற்றுப் பேசினார். கவிஞர் யுவபாரதி தலைமை வகித்துப் பேசினார். சேத்துப்பட்டு திவ்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தாமஸ் அப்பாத்துரை வெளியிட கவிஞர் குமாரி பிரகாஷ் பெற்றுக் கொண்டார். பாவலர் வையவன், கவிஞர் தி. பரமேசுவரி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் பேரா. வே. நெடுஞ்செழியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


நூலாசிரியரின் பெற்றோர் கெங்கம்மாள் - வாசுதேவன் ஆகியோர் பிரதிகளை வழங்க ஏந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் இரா.நாகசங்கர், குமுதம் இராமசாமி முதலான பலர் பெற்றுக் கொண்டனர். சுரேஷ் நிகழ்வைத்தொகுத்து வழங்க, நூலாசிரியர் ஏந்தல் கணா ஏற்புரைத்தார்.



நூலின் விலை: ரூ. 50/-

மணிவாசகர் பதிப்பகம்,

31, சிங்கர் தெரு,

பாரி முனை,

சென்னை - 108.