Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

December 15, 2013

ம.பொ.சி. நான்கு நூல்கள் விமர்சனக் கூட்டம் - ஒலிப்பதிவு

இராஜேந்திர சோழன், ஜெயமோகன், ஹாமீம் முஸ்தபா

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் தமிழர் திருமணம், சீர்திருத்தப் போலிகள், கண்ணகி வழிபாடு மற்றும் தமிழன் குரல் ஆகிய நான்கு நூல்கள் குறித்த விமர்சனக் கூட்டம் 14/12/2013 சனிக்கிழமை காலை சென்னை சைதாபேட்டையில் உள்ள அகநாழிகை புத்தகக் கடையில் நடந்தது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் ஹாமீம் முஸ்தபா, ஜெயமோகன், மற்றும் இராஜேந்திரசோழன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். கவிஞர் தி.பரமேசுவரி நிகழ்வைத் தொகுத்தளித்தார். அகநாழிகை பொன்.வாசுதேவன் நன்றி தெரிவித்தார்.


அந்நிகழ்வின் mp3 வடிவிலான ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம்.




ஜெயமோகன் விமர்சன உரை





ஒலிப்பதிவு : யுவபாரதி

September 30, 2011

நாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா - ஒலிப்பதிவு

நாஞ்சில் நாடன்
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்திய அகாடமிங்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் 3 ஜனவரி 2011 அன்று  அவருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாரதிமணி, ஞாநி, இராசேந்திர சோழன், கண்மணி குணசேகரன், ஜெயமோகன் உள்ளிட்ட பலர் பாராட்டிப் பேசினர். நாஞ்சில் நாடன் நன்றி தெரிவித்துப் பேசினார். அந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.


mp3 வடிவில்...

நாஞ்சில் நாடன் குறித்துப் பிற எழுத்தாளர்கள் பேசியது:



நாஞ்சில் நாடன் பேசியது:



ஒலிப்பதிவு- யுவபாரதி

January 11, 2011

எழுத்தாளர் ஜெயமோகனின் எதிர்வினை

நன்றி: www.jeyamohan.in

கட்டுரை பற்றிய மாற்றுக்கருத்துக்களை தெரிந்துகொண்டேன். பொதுவாக நமக்கு பிரியமானவர்களை அப்பழுக்கற்றவர்களாக உருவகித்துக்கொள்ளும் மனப்பழக்கம் உண்டு. ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அது நல்ல மனநிலையே. ஆனால் அரசியலில் அது சரியாக அமையாதென்பது என் என்ணம். பற்றில் இருந்து வரும் வரிகளுடன் விவாதிக்கமுடியாது

நான் காமராஜ், ராஜாஜி, மபொசி ஆகிய அனைவரைப்பற்றியும் நிறைகுறைகளுடனேயே பார்க்கிறேன். அவர்களைப்பற்றி அவர்க்களோ அவர்களின் ஆதரவாளர்களோ எழுதும் நூல்களை மட்டும் சார்ந்திருப்பதில்லை. என்னுடைய புரிதல்கள் வெறும் வாசிப்பை மட்டும் சார்ந்தவை அல்ல. எல்லைபோராட்ட வீரரும் காங்கிரஸ் முன்னோடியுமான தாணுலிங்கநாடார் தேரூர் சிவன்பிள்ளை போன்றவர்களிடம் மிகநெருக்கமாக பழக்வும் அவர்களின் அந்தரங்க கடிதங்களை முறைப்படுத்தவும் வாய்ப்புகிடைத்தவன் என்ற முறையில் உருவான புரிதல்.

இக்கட்டுரையில் நான் மபொசியை குறைத்துமதிப்பிடும் தொனி வந்துவிட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர் ஒரு தனிப்பட்ட மக்கள் சக்தி அல்ல. அவருடைய ஆதரவுதளம் காங்கிரஸால், ஒரு பதிலிப்போரின் பொருட்டு உருவாக்கி அளிக்கப்பட்டது. அவர் நடத்திய எல்லா போராட்டங்களும் அவர் காங்கிரஸுக்குள் இருந்தபோதே நடத்தினார்.வெளியேற நேரிட்டபின் அவர் தனியாளானார். இது வரலாற்று உண்மை. ஆனால் அவர் தமிழ்மீதும், இந்தியதேசியத்தின் ஒளிமிக்க பகுதி என்ற கோணத்தில் தமிழ்த்தேசியம் மீதும் கொண்ட பற்று உண்மையானது. அவரது வரலாற்றுப் பங்களிப்பு முக்கியமானது. அதிகார உட்கட்சிஅரசியல் காரணமாக அவர் காமராஜால் வெளியேற்றப்பட்டது துரதிருஷ்டவசமானது என்றே நினைக்கிறேன். காங்கிரஸ் தமிழுணர்ச்சியற்றது என்ற வாதங்கள் வலுப்பெற அது வழியமைத்தது. காங்கிரஸின் தேசியநோக்கை தமிழுணர்வுடன் பிணைக்கவே ஆளில்லாமலாயிற்று. அவரது தரப்பு காங்கிரஸுக்குள் நீடித்திருந்தால் திராவிட இயக்க அரசியல் இந்த அளவுக்கு ஒற்றைப்படை வெற்றியை அடைந்திருக்காதென்றே நினைக்கிறேன். இக்கட்டுரையிலும் அதே தொனியுடன் மட்டுமே எழுதியிருக்கிறேன்

ராஜாஜி கட்சித்தாவல் மூலம் பதவிக்கு வந்தார் என்பதும் என்ன விளக்கமளித்தாலும் வரலாற்று உண்மை. நேரு அதை விரும்பவில்லை, பதவி விலக கோரினார், ராஜாஜி மறுத்துவிட்டார். இச்செய்தியை சமீபத்தில் ராமச்சந்திர குகாவின் காந்திக்குப்பின் இந்தியவரலாறு நூலிலும் கண்டதாக நினைவு. அதுவே முதல் கட்சித்தாவல், முதல் மைனாரிட்டி அரசு. நான் திருவுருக்களை உருவாக்கவில்லை. சூழலை ஒட்டுமொத்தமான பின்னணியாக வைத்து தனிப்பட்ட அரசியல்தலைவர்களின் பங்களிப்பை புரிந்துகொள்ள முயல்கிறேன், அவ்வளவுதான்.

ஜெ