இராமாயணக் கதாபாத்திரங்களில் எனக்கும் மிகப் பிடித்த பாத்திரங்களில் ஒன்று கும்பகருணன். இராமனுக்கு இலக்குவன் போல், இராவணனுக்கு கும்பகருணன். நல்ல தம்பிகள். செஞ்சோற்றுக் கடன் தீர்க்கப் போருக்குப் போனவன்.
கம்பராமாயணத்தின் அற்புதமான படலங்களில் ஒன்று கும்பகருணன் வதைப் படலம். மிகவும் சிரமப்பட்டு கும்பகருணனை எழுப்புவர். எழுந்துவந்து இராவணனைச் சந்திப்பான் கும்பகருணன். நடந்தவை அறிந்ததும், "இது நல்லது இல்லை அண்ணா! சீதையை வெளிவிட்டு விடுவதே நல்லது" என்று சொல்வான். "எனக்கு அறிவுரை சொல்ல நீ ஒன்றும் அமைச்சன் இல்லை, நீ பயந்து விட்டாய், போ! போய் மீண்டும் இரவும் பகலும் தூங்கு..." என்று சீறும் இராவணன்,
கம்பராமாயணத்தின் அற்புதமான படலங்களில் ஒன்று கும்பகருணன் வதைப் படலம். மிகவும் சிரமப்பட்டு கும்பகருணனை எழுப்புவர். எழுந்துவந்து இராவணனைச் சந்திப்பான் கும்பகருணன். நடந்தவை அறிந்ததும், "இது நல்லது இல்லை அண்ணா! சீதையை வெளிவிட்டு விடுவதே நல்லது" என்று சொல்வான். "எனக்கு அறிவுரை சொல்ல நீ ஒன்றும் அமைச்சன் இல்லை, நீ பயந்து விட்டாய், போ! போய் மீண்டும் இரவும் பகலும் தூங்கு..." என்று சீறும் இராவணன்,
'மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக்
கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு, உய் தொழில்
ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;
யான் அது புரிகிலேன்; எழுக போக!' என்றான்.
'என்னை வென்றுளர்எனில், இலங்கை காவல!
உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்,
பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை-
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே.
'இற்றைநாள் வரை, முதல், யான் முன் செய்தன
குற்றமும் உள எனின் பொறுத்தி; கொற்றவ!
அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய!
பெற்றனென் விடை' என, பெயர்ந்து போயினான்.
- யுவபாரதி
No comments:
Post a Comment